Sunday, March 8, 2009

என் முதல் முயற்சி!!

http://writtenbymadhi.blogspot.com/2009/03/blog-post.html

This is my first try!! கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்கு இருக்கலாம்.. ஆனாலும் தவறை சுட்டிக் காட்டுங்கள் அதே சமயம் மன்னிக்கவும் செய்யுங்கள் :)
-
மதி.

ஒற்றை நூறு ரூபாய் தாளும் பொது ஜனங்களும்!!

சனிக்கிழமை அலுவல் முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன்.. வீட்டை நெருங்குகையில் கைப்பையில் இருந்து ஆட்டோக்கு கொடுக்க எடுத்த எனது நூறு ரூபாய் தாளை காற்று கவர்ந்து சாலைக்கு எடுத்துக் கொண்டு ஓடியது.. பதறிய நான் சுதாரிக்கும் முன்பு, சாலையில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனமும் சுதாரித்தது தான் மிக பெரிய ஆச்சரியமே.. வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகங்களில் இருந்து மக்கள் எப்படி இந்த நூறு ரூபாய் தாளை கண்டுகொண்டார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது..

பின்னால் வேகமாக வரும் வாகனங்களை கூட கண்டுகொள்ளாமல் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சட்டென நிற்க, அவருக்கு முன்னாள் சென்ற நான்கு சக்கர வாகனமும் ஓரங்கட்டியது எனக்கு அதிர்ச்சி.. பின்னால் வந்த அனைத்து வாகனமும் சட்டென நிற்க என அங்கே கொஞ்சம் கூட்டமும் சேர்ந்தது.. இவை அனைத்தும் ரூபாவை தவற விட்ட நான் சுதாரிக்கும் முன்பு நடந்தது!!

நான் வந்த ஆட்டோ ஓட்டி இறங்கி சென்று அது எனது என நிரூபித்து வாங்கி வந்து விட்டு சொன்னார்.. "எப்படி தான் ரூபாய்னு தெரிஞ்சு வண்டிய நிறுத்துரான்களோ" என்று!!

பத்து ரூபாய்க்கு எல்லாம் ஆசை படுவாங்கமா இவனுங்க அல்ப்ப பயலுங்க என்றார்.. வீட்டின் முன்பு என்னை இறக்கி விட்டு "மா பத்து ரூபாய் மேல போட்டுக் கொடுமா " என்றார்!!

நல்ல உடை அணிந்து, நல்ல வாகனங்களில் செல்லும் மக்களுக்கு, சாலையில் ரூபாய்த் தாளை பார்த்தால் உயிர் பயம் கூடவா இல்லாமல் போகும்?!!

உலக மகளிர் தினம்!!

இந்த பதிவுக்கு காரணம் "கொடும்பாவி"!! அவர் என்னை கேட்ட கேள்வி "உலக மகளிர் தினம் பத்தி என்ன நினைக்குறீங்க?" கேள்விக்கு நன்றி!! :-)

மகளிர் தினம் மூலமா தான் பெண்களை கொண்டாடனும்னு இல்லை, வருஷத்துல 365 நாட்களுமே கொண்டாட பட வேண்டியவர்கள் தான் பெண்கள் ஆகிய நாங்கள்!!

எனக்கு இந்த 33% அப்படிங்கற விஷயத்துல நம்பிக்கை இல்லை.. என் வீட்டிலேயே கூட என் அண்ணனுக்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை.. அதை பாகுபாடாக நான் எண்ணவில்லை.. பாதுகாப்பாக தான் உணர்கிறேன். பெண்களுக்கு உரிமைக் கொடுக்க வேண்டியதை பற்றி பேசும் முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்!! இன்னமும் பெண்களால் இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்கையில் பயம் இல்லாமல் சென்று சேர முடியவில்லை.. சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் வரை பாகுபாடில்லாமல் தனியே வரும் பெண்களிடம் தவறாக நடக்கவே முயல்கிறார்கள்!! ஒரு பெண் இங்கே பகலிலேயே சுதந்திரமாக செல்ல முடியவில்லை இதிலே இரவினில் எங்கே போவது? அதுவும் கழுத்து நிறைய நகையுடன்!!

பெண்களை மதிப்பதும், கொண்டாடுவதும் ஒரு புறம் இருக்கட்டும் எங்களை தைரியமாக, நிம்மதியாக, மரியாதையாக ஊருக்குள்ளே நடமாட உதவும் சமுதாயமாக இந்த உலகத்தை மாற்றுங்கள், அதைவிட நாங்கள் பெரிதாக என்ன கேட்டுவிட போகிறோம்?

பெற்றவளை மதிக்கவும், உடன் பிறந்தவளை பாதுகாக்கவும், உங்களுக்குப் பிறந்தவளை நேசிக்கவும் தெரிந்த நீங்கள் உடன் வேலை பார்க்கும், பயணிக்கும், நடமாடும் பெண்களையும் அசுவாசமாக சுவாசிக்க விடுங்கள்.. உங்களுக்கு பயந்து ஓடி ஓடி நாங்கள் மூச்சடைப்பது, வாழ்கையையே சில சமயம் கேள்வி குறியாக்கி விடுகிறது!!

எங்களை மதியுங்கள், கொண்டாடுங்கள், இதெல்லாம் செய்வதற்கு முன்பு எங்களுக்கான பாதுகாப்பை தாருங்கள்!!

We've been only asking for something we've lost & something we deserve.. Right to Live on this earth without fearing a co-human!!

I am wishing every women out there a very "Happy Womens Day"!! Lets take an oath to be brave, bold & brilliant to tackle this insecure world around us.